பாமக தலைவர் அன்புமணி ராமதாசை, பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாசை, பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா சந்தித்து பேசினார்.
சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.