சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திருமாவளவன் கார் மோதிய விபத்தில் விசிக தரப்பினர் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு திருமாவளவன் கார் சென்றபோது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின்போது வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விசிக தரப்பினர் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், விசிக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அளித்த புகாரின் அடிப்படையில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















