தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பிற வட மாநிலங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
மேலும் தீபாவளி போனஸ் இன்று அனைத்து நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்படும் அதன்படி சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் திரும்பி வர தாமதமாகும் என்பதால் பனியன் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இதனால் நாளை முதல் 26 ஆம் தேதி வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுதொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி போனஸ் பெற்ற ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர்.