லஞ்சத்தில் ஊறிய ஐபிஎஸ் அதிகாரி : கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

லஞ்சத்தில் ஊறிய ஐபிஎஸ் அதிகாரி : கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம், கிலோ கணக்கில் தங்கம் சிக்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. லஞ்சத்தில் ஊறி திளைத்த அந்த அதிகாரி யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர்தான் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிபிஐ பிடியில் வசமாகச் சிக்கியவர். 2009 பேட்ஜ்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர், 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்.

பழைய வழக்கை முடித்து வைப்பதற்காக ரோப்பர் சரக டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர், இடைத்தரகர் மூலம் பேரம் பேசியதாகவும், மாதந்தோறும் 8 லட்சம் லஞ்சம் கோரியதாகவும் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஆகாஷ் பட்டா என்பவர் அண்மையில் சிபிஐ-யில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதன் பேரில், டிஐஜி-யின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த சிபிஐ அவரை கையும் களவுமாகப் பிடிக்க நேரம் பார்த்துக் காத்திருந்தது. இந்த நிலையில், மொஹாலியில் உள்ள தனது அலுவலகத்தில், முதல் தவணை பணத்தை வழங்குமாறு ஆகாஷை ஹர்சரண்சிங் அழைத்திருக்கிறார்.

அதிகாரிகளின் ஆலோசனையின்படி அங்கு ஆகாஷ் அங்குச் சென்றபோது, சிபிஐ வைத்த பொறியில் டிஐஜி ஹர்சரண்சிங் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லரின் அலுவலகம், வீடுகளில் அங்கும் அங்குலமாகச் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள், அவரது இடைத்தரகர் கிருஷ்ணா என்பவரையும் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகப் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள டிஐஜி ஹர்சரண் சிங் புல்லருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது… அதில் கட்டுக்கட்டாக 5 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், ஆடி, மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்கள், 22 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. 2009ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண்சிங் புல்லர், முன்னாள் பாதுகாப்பு டிஐஜி மேஹல் சிங் புல்லரின் மகன்.

மொஹாலி காவல்துறை கண்காணிப்பாளர், பட்டியலா சரக காவல்துறை துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். குறிப்பாகப் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியாவை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர்.

இப்போது பல்வேறு பொறுப்புகளை வகித்த ஹர்சரண்சிங் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஊழல் வழக்கில் கையும் களவுமாகச் சிக்கியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: punjabipsIPS officer involved in bribery: Cashgold seized in a controlled manner
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Next Post

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies