சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 08:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள சிறப்பு அம்சங்களை அஸ்திரா-2 திட்டத்தில் இணைத்து மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் PL-15E ரக ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்திய எல்லையில் பல இடங்களில் இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் JF-17 போர் விமானம்மூலம் ஏவப்பட்ட PL-15E ரக ஏவுகணை ஒன்று, பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது.

இந்த ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது, சீனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் எதிரி நாடுகளுக்கு முழுமையாகக் கிடைக்கும் ஒரு ஏவுகணையின் மூலம் அதன் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிய முடியும் என்பதோடு, அதை ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் முடியும்.

சீனாவின் PL-15E ரக ஏவுகணையைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அதனை அங்குலம், அங்குலமாகச் சோதித்தது.. PL-15E ரக ஏவுகணை வானில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஆயுத அமைப்பை மேலும் ஆபத்தானதாக மாற்ற, சீன ஏவுகணையின் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை, அஸ்திரா-2 ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் இணைக்க DRDO திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. PL-15E என்பது 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய நீண்ட தூர, காட்சிக்கு அப்பாற்பட்ட வான்வழி ஏவுகணை. ஒலியை விட 5 மடங்கு வேக பாய்ச்சலில் செல்லக் கூடியது.

இதன் ரேடார் அமைப்பு ஜாமிங் சூழல்களிலும் கூட இலக்குகளைத் துல்லியமாக தாக்க உதவுகிறது. இந்த அனைத்து அம்சங்களும், குறிப்பாக ரேடார் தொழில்நுட்பம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அஸ்திரா ஏவுகணையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இதுதொடர்பான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சீன ஏவுகணையில் பல சிறந்த அம்சங்கள் இந்திய ஏவுகணைகள் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chinaWhat is the secret of Chinese missile analysis? : Astra-2 missile becomes dangerousஅஸ்திரா-2 ஏவுகணைசீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன?
ShareTweetSendShare
Previous Post

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

Next Post

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies