சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!
Mar 15, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 08:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள சிறப்பு அம்சங்களை அஸ்திரா-2 திட்டத்தில் இணைத்து மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் PL-15E ரக ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்திய எல்லையில் பல இடங்களில் இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் JF-17 போர் விமானம்மூலம் ஏவப்பட்ட PL-15E ரக ஏவுகணை ஒன்று, பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது.

இந்த ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது, சீனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் எதிரி நாடுகளுக்கு முழுமையாகக் கிடைக்கும் ஒரு ஏவுகணையின் மூலம் அதன் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிய முடியும் என்பதோடு, அதை ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் முடியும்.

சீனாவின் PL-15E ரக ஏவுகணையைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அதனை அங்குலம், அங்குலமாகச் சோதித்தது.. PL-15E ரக ஏவுகணை வானில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஆயுத அமைப்பை மேலும் ஆபத்தானதாக மாற்ற, சீன ஏவுகணையின் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை, அஸ்திரா-2 ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் இணைக்க DRDO திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. PL-15E என்பது 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய நீண்ட தூர, காட்சிக்கு அப்பாற்பட்ட வான்வழி ஏவுகணை. ஒலியை விட 5 மடங்கு வேக பாய்ச்சலில் செல்லக் கூடியது.

இதன் ரேடார் அமைப்பு ஜாமிங் சூழல்களிலும் கூட இலக்குகளைத் துல்லியமாக தாக்க உதவுகிறது. இந்த அனைத்து அம்சங்களும், குறிப்பாக ரேடார் தொழில்நுட்பம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அஸ்திரா ஏவுகணையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இதுதொடர்பான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சீன ஏவுகணையில் பல சிறந்த அம்சங்கள் இந்திய ஏவுகணைகள் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chinaWhat is the secret of Chinese missile analysis? : Astra-2 missile becomes dangerousஅஸ்திரா-2 ஏவுகணைசீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன?
ShareTweetSendShare
Previous Post

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

Next Post

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies