தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்றி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இதனால் தமிழகத்தில் கனமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.