அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுக் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளதாகவும் இதன் காரணமாக அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் மேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழகம், கேரளா, புதுச்சேரி பகுதிகளில் 2 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த வானிலை ஆய்வு மையம் வங்கக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.