கனமழை எச்சரிக்கை காரணமாகத் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.