PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!
Mar 15, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

Murugesan M by Murugesan M
Oct 22, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தமிழக அரசு தொடர்ந்துஇந்தத் திட்டத்தில் சேராமல் அடம்பிடித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்தத ஒரு செய்திதொகுப்பைத் தற்போது காணலாம்.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 ஆயிரத்து 500 பள்ளிகளை முன்னுதாரண பள்ளிகளாக மேம்படுத்துவதே PM SHRI திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளுக்குத் தனிக்கட்டடம், சாய்வுதளம், போதுமான மாணவர் சேர்க்கை, தனித்தனி கழிப்பறைகள், குடிநீர், கைக்கழுவும் வசதி, தடையற்ற மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட 10 அடிப்படை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவின் 670 மாவட்டங்களில் 13 ஆயிரத்து 070 PM SHRI பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ஆயிரத்து 888 PM SHRI பள்ளிகள் உள்ளன. இதற்கிடையே, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்து வந்த கேரள அரசு, 5ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் திட்டமான PM SHRI திட்டத்தில் இணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது.

குறிப்பாக மத்திய அரசு PM SHRI திட்டத்துடன் சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை இணைத்துவிட்டதால், 2023-2024 நிதியாண்டின் நடுப்பகுதியில் இருந்து கேரளாவுக்கான ஆயிரத்து 143 கோடி ரூபாய் மத்திய நிதி தடைசெய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள அரசு PM SHRI திட்டத்தில் இணைய முடிவெடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி மாநிலத்திற்குரிய சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை பெறுவதற்காக இந்த நடைமுறையை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கக் கூடாது என தெரிவித்த அவர், வேளாண்மை, சுகாதாரம், உயர் கல்வி ஆகிய துறைகளின் வரிசையில், பள்ளி கல்வித் துறையும் இனி மத்திய திட்டங்களின் பலன்களை அனுபவிக்கப்போவதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் கேரள அரசு தனது கல்வி கொள்கையிலிருந்து எப்போது விலகாது எனவும், மாநிலத்தின் கொள்கைக்கு முரணான தேசிய கல்வி கொள்கை அம்சங்கள் எதுவும் கேரளாவில் நடைமுறைக்கு வராது என்றும் அமைச்சர் வி.சிவன்குட்டி உறுதியளித்தார். முன்னதாக தேசிய கல்வி கொள்கை திட்டம் தனியார்மயத்தை ஊக்குவித்து பொது கல்வியை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், 6 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கான கட்டாய இலவச கல்வியில் இருந்து, அரசின் பொறுப்பை தேசிய கல்வி கொள்கை விலக்குவதாகவும் அக்கட்சி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது.

ஆனால், PM SHRI திட்டத்தில் தற்போது கேரளாவும் இணைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு மட்டுமே இத்திட்டத்தில் இணைய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி, மதிப்பீடு, பள்ளி வசதிகள் உள்ளிட்ட பல துறைகளில் PM SHRI திட்டத்தின் இலக்குகளை கேரளா எட்டியுள்ளதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அம்மாநில அரசு தங்கள் கல்வி கொள்கையை கைவிடும் நிலை ஏற்படாது என கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய கல்வி கொள்கையின் 4.31-வது பிரிவின்படி தேசிய பாடத்திட்டத்துடன் உள்ளூர் பாடத்திட்டங்களையும் சேர்க்கலாம் என்பதால், மாநிலங்களுக்கு தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய நிதியை உறுதிபடுத்தவும், தங்கள் மாநில கல்வி கொள்கை நிலைத்திருக்கவும் கேரள அரசு சமநிலையான முடிவை மேற்கொண்டுள்ள நிலையில், இனி தனித்து விடப்பட்ட தமிழ்நாடு அரசு இதில் என்ன முடிவெடுக்க காத்திருக்கிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Tags: Kerala government joins PM SHRI scheme: Students' futures wasted by the arrogant Tamil Nadu governmentPM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு
ShareTweetSendShare
Previous Post

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

Next Post

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies