புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?
Oct 23, 2025, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Web Desk by Web Desk
Oct 23, 2025, 09:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, மீண்டும் தலைதூக்க சதித் திட்டம் தீட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த அமைப்பில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை, கண்காணிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது புலனாய்வு அமைப்பு.

சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாகக் கடந்த 2022ம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகள் தடைவிதித்தது மத்திய உள்துறை அமைச்சகம். நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, நிதியளிப்பது, கொடூரமான கொலைகளை அரங்கேற்றுவது என அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டதன் காரணமாகப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புத் தடை செய்யப்பட்ட நிலையில், அதனைப் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றன.

கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகளை பரப்பிச் செயல்பட்டு வந்தது. 2022ம் ஆண்டு இந்த அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு முன்னர், அந்த அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிகளவிலான பணம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வந்ததது தெரியவந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த அமைப்பு புதிய உத்தியுடன் மீண்டும் தலைதூக்க திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன… அந்த அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு முன்னர், ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பலர் தலைமறைவு வாழ்க்கையை தொடர்கின்றனர்.

PFI சித்தாந்தத்தின் அடிப்படையான நோக்கத்தைப் பாதுகாக்கும் அவர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மத்திய அரசு தடைவிதித்த பின்னர், அந்த அமைப்பு வெளிப்படையாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதது போல் தோற்றத்தைத் தந்தாலும், ஒரு பிரிவு அதன் சித்தாந்தத்தை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இது அந்த அமைப்பு மீண்டும் மறுமலர்ச்சி பெறும் சாத்தியக் கூறுகளை உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக 2001ம் ஆண்டுத் தடை செய்யப்பட்ட SIMI அதாவது இந்திய இஸ்லாமிய இயக்கம், 2008ம் ஆண்டு IM அதாவது இந்திய முஜாஹிதீன் எனத் தனது பெயரை மாற்றிக் கொண்டு இயங்கத் தொடங்கியது… இதே பாணியை அணுகுமுறையை PFI-யும் கையாளும் என்று தெரிகிறது.

PFI போன்றே, SIMI தனது ஆதரவாளர்களை தலைமறைவாக இருக்கவும், செயல்பாடுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியிருந்தது. அதே நேரத்தில் சில உறுப்பினர்கள் தங்கள் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளில் சேரவும் அறிவுறுத்தியது.

இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயருடன் மீண்டும் தோன்றிய நேரத்தில், வலிமையான அமைப்பாக மாறியிருந்தது. PFI தொடக்கத்தில் கேரளாவை தளமாகக் கொண்டு இயங்கினாலும், பின்னர் 25 மாநிலங்களில் கிளையை விரிவுபடுத்தியது.

வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வஹாபி போதகர்களின் செல்வாக்காலும், தடையற்ற நிதி பரிமாற்றத்தாலும், சிந்தாந்தத்தை பரப்புவதில் கவனம் செலுத்தியது… PFI பல வட மாநிலங்களுக்கு அதன் எல்லையை விரிவுபடுத்திப் பீகாரில் குறிப்பிடத் தக்க இருப்பை நிலைநாட்டியதால், அந்த அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் எங்கும் இருப்பதாகப் புலனாய்வுஅமைப்பு எச்சரித்துள்ளது.

Tags: Intelligence agencies warn: Is PFI plotting to rise again?
ShareTweetSendShare
Previous Post

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Next Post

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

Load More

அண்மைச் செய்திகள்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies