மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு, மாலை 6 மணி முதல் விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணை மின்நிலையம் மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக 22 ஆயிரத்து 500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
















