பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்தும், செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். தொடர்ந்து, கட்சிக்கும், தனக்கும் காந்திமதி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
















