பாகிஸ்தானின் கடன் சுமை 25 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
தவறான பொருளாதார கொள்கைகள், கடன் சுமைகள், எல்லை மோதல்களின் காரணமாகப் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
கடுமையான விலைவாசி உயர்வால் அந்நாட்டின் அடித்தட்டு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து அந்நாட்டின் வணிகத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.
இந்நிலையில் 2025-ம் நிதியாண்டின் கடந்த மாதத்துக்கான வருடாந்திர கடன் சீராய்வு அறிக்கையை பாகிஸ்தான் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், பாகிஸ்தானின் உள்நாட்டுக் கடன் 15 சதவீதமும், வெளிக்கடன் 6 சதவீதமும் உயர்ந்தது தெரியவந்துள்ளது.
அதன்படி பாகிஸ்தானின் கடன் இந்திய மதிப்பில் 25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாயாகவே இருந்தது. பாகிஸ்தானின் கடனில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாடுகளில் பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது.
















