திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல்மணிகள் கனமழை காரணமாக நனைந்ததால் அதன் ஈரப்பதம் அதிகரித்தது.
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக அரசுக் கடிதம் எழுதிய நிலையில், 3 குழுக்களை மத்திய அரசு நியமித்தது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
5 பேர் கொண்ட மத்திய குழுவினர் செம்பேடு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
அப்போது, தொடர் கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்மணிகளின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
















