தீவிர சூறாவளியாக சுழன்றடித்த "மெலிசா" : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 09:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்லாண்டிக் பெருங்கடலில் சாதாரணமாக உருவான மெலிசா புயல், திடீரென 5-ம் பிரிவு சூறாவளியாக வலுபெற்றது விஞ்ஞானிகளையும், வானிலை ஆய்வாளர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை மணி என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரீபியன் கடற்பரப்பில் உருவான மெலிசா சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் இதுவரை காணப்பட்ட சக்திவாய்ந்த சூறாவளிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட கோடைகாலத்தால் கடலின் வெப்பநிலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில், அதீத கொதிநிலையில் இருந்த கடல் நீர் சூறாவளியின் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுத்தது.

இதன் காரணமாகவே முதலில் சாதாரண புயலாக உருவான மெலிசா வேகமாக வலுவடைந்து மாபெரும் சூறாவளியாக உருவெடுத்தது. அதன் கோரதாண்டவம் ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளை பந்தாடிய காட்சிகளை, உலக மக்கள் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. கடற்பகுதியில் உருவாகும் ஒவ்வொரு புயலும், நிலப்பரப்பை அடையும்போது வலுவிழப்பது இயல்பு.

ஆனால் அதற்கு விதிவிலக்காக விளங்கிய மெலிசா சூறாவளி, ஜமைக்காவில் கரையை கடந்தபோது அந்நாட்டை தடம் தெரியாமல் சிதறடித்தது. 4-ம் பிரிவை தாண்டி 5-ம் பிரிவு சூறாவளியாக வலுவடைந்த மெலிசா தனித்துவமானதாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து அதீத வெப்பத்துடன் மேலே எழுந்த நீராவி, புயலின் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த ‘இயந்திரம்’ போல் செயல்பட்டு, அதன் சுழற்சி வலுவடைய வழிவகுத்தது.

அதே நேரத்தில், மேல்நில வளிமண்டலத்தில் காணப்பட்ட குளிர்ந்த காற்று அதற்குக் கூடுதல் ஆற்றலை வழங்கியது. மற்றொருபுறம், வழக்கமாகப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் ‘TROPHOPAUSE’ எனும் வளிமண்டலத்தின் மேல் மற்றும் கீழ் சுருக்கங்களுக்கு இடையிலான பகுதி, தற்போது அட்லாண்டிக் பெருங்கடலிலும் அதே அளவில் உயர்ந்துள்ளது. இது மெலிசா சூறாவளியின் மேகங்கள் உயரமாகவும், குளிச்சியாகவும் உருவாகி, அதன் உள்வட்டத்தில் மிகச் சக்திவாய்ந்த சுழற்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.

இந்த அனைத்து காரணிகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால், மெலிசா மிகக் குறைந்த நேரத்தில் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுபெற முடிந்ததாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகம் மணிக்கு 70 மைல் வரை அதிகரித்தது. ‘RAPID INTENSIFICATION’ என்று அழைக்கப்படும் இது போன்ற நிகழ்வு, மக்களுக்கும், அரசு நிர்வாகங்களுக்கும் தயாராகும் நேரத்தை வேகமாகக் குறைக்கும் என்பதால், மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மனிதனால் உண்டான காலநிலை மாற்றமும் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகத்தைச் சுமார் 10 மைல் வரை அதிகரித்திருக்கலாம் எனக்கூறும் விஞ்ஞானிகள், இதனால் அதன் அழிவுத்திறன் 50 சதவீதம் வரை உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

வெப்பம் நிறைந்த கடல் நீரும், அதிக ஈரப்பதமுள்ள காற்றும், புயல்களுக்கு அதீத மழைப்பொழிவு மற்றும் காற்றழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான கூடுதல் ஆற்றலை வழங்கும் என்பதற்கு மிகச்சிறந்த சான்றாக மெலிசா விளங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் உலகத்தையே உற்று நோக்க வைத்த மெலிசா சூறாவளி இயற்கையின் வலிமையை மட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் எத்தனை எளிதாக நம்மைச் சுற்றியுள்ள சூழலை மாற்றுகிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.

Tags: மெலிசா புயல்"Melissa" spun into a severe cyclone: ​​What were the factors that led to its strengthening?மெலிசாஅட்லாண்டிக் பெருங்கடல்
ShareTweetSendShare
Previous Post

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

Next Post

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies