தீவிர சூறாவளியாக சுழன்றடித்த "மெலிசா" : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?
Oct 30, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

Web Desk by Web Desk
Oct 30, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்லாண்டிக் பெருங்கடலில் சாதாரணமாக உருவான மெலிசா புயல், திடீரென 5-ம் பிரிவு சூறாவளியாக வலுபெற்றது விஞ்ஞானிகளையும், வானிலை ஆய்வாளர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை மணி என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரீபியன் கடற்பரப்பில் உருவான மெலிசா சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் இதுவரை காணப்பட்ட சக்திவாய்ந்த சூறாவளிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட கோடைகாலத்தால் கடலின் வெப்பநிலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில், அதீத கொதிநிலையில் இருந்த கடல் நீர் சூறாவளியின் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுத்தது.

இதன் காரணமாகவே முதலில் சாதாரண புயலாக உருவான மெலிசா வேகமாக வலுவடைந்து மாபெரும் சூறாவளியாக உருவெடுத்தது. அதன் கோரதாண்டவம் ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளை பந்தாடிய காட்சிகளை, உலக மக்கள் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. கடற்பகுதியில் உருவாகும் ஒவ்வொரு புயலும், நிலப்பரப்பை அடையும்போது வலுவிழப்பது இயல்பு.

ஆனால் அதற்கு விதிவிலக்காக விளங்கிய மெலிசா சூறாவளி, ஜமைக்காவில் கரையை கடந்தபோது அந்நாட்டை தடம் தெரியாமல் சிதறடித்தது. 4-ம் பிரிவை தாண்டி 5-ம் பிரிவு சூறாவளியாக வலுவடைந்த மெலிசா தனித்துவமானதாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து அதீத வெப்பத்துடன் மேலே எழுந்த நீராவி, புயலின் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த ‘இயந்திரம்’ போல் செயல்பட்டு, அதன் சுழற்சி வலுவடைய வழிவகுத்தது.

அதே நேரத்தில், மேல்நில வளிமண்டலத்தில் காணப்பட்ட குளிர்ந்த காற்று அதற்குக் கூடுதல் ஆற்றலை வழங்கியது. மற்றொருபுறம், வழக்கமாகப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் ‘TROPHOPAUSE’ எனும் வளிமண்டலத்தின் மேல் மற்றும் கீழ் சுருக்கங்களுக்கு இடையிலான பகுதி, தற்போது அட்லாண்டிக் பெருங்கடலிலும் அதே அளவில் உயர்ந்துள்ளது. இது மெலிசா சூறாவளியின் மேகங்கள் உயரமாகவும், குளிச்சியாகவும் உருவாகி, அதன் உள்வட்டத்தில் மிகச் சக்திவாய்ந்த சுழற்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.

இந்த அனைத்து காரணிகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால், மெலிசா மிகக் குறைந்த நேரத்தில் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுபெற முடிந்ததாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகம் மணிக்கு 70 மைல் வரை அதிகரித்தது. ‘RAPID INTENSIFICATION’ என்று அழைக்கப்படும் இது போன்ற நிகழ்வு, மக்களுக்கும், அரசு நிர்வாகங்களுக்கும் தயாராகும் நேரத்தை வேகமாகக் குறைக்கும் என்பதால், மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மனிதனால் உண்டான காலநிலை மாற்றமும் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகத்தைச் சுமார் 10 மைல் வரை அதிகரித்திருக்கலாம் எனக்கூறும் விஞ்ஞானிகள், இதனால் அதன் அழிவுத்திறன் 50 சதவீதம் வரை உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

வெப்பம் நிறைந்த கடல் நீரும், அதிக ஈரப்பதமுள்ள காற்றும், புயல்களுக்கு அதீத மழைப்பொழிவு மற்றும் காற்றழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான கூடுதல் ஆற்றலை வழங்கும் என்பதற்கு மிகச்சிறந்த சான்றாக மெலிசா விளங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் உலகத்தையே உற்று நோக்க வைத்த மெலிசா சூறாவளி இயற்கையின் வலிமையை மட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் எத்தனை எளிதாக நம்மைச் சுற்றியுள்ள சூழலை மாற்றுகிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.

Tags: மெலிசா புயல்"Melissa" spun into a severe cyclone: ​​What were the factors that led to its strengthening?மெலிசாஅட்லாண்டிக் பெருங்கடல்
ShareTweetSendShare
Previous Post

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

Next Post

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

Related News

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தெய்வீக திருமகனார்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies