உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகச் சூரியகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார்.
இதையொட்டி, அடுத்த தலைமை நீதிபதிக்குச் சூரியகாந்த் பெயரைக் கவாய் பரிந்துரைத்தார்.
கவாயின் பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகச் சூரியகாந்தை நியமித்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யகாந்துக்கு அடுத்த மாதம் 24ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
 
			















