மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?
Mar 15, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரூவை, வின்ட்சர் எஸ்டேட்டில் உள்ள அவரது ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார். இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டபின் முன்னாள் இளவரசர் எதையெல்லாம் இழப்பார்? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற பிரச்சனைகளால் பிரிட்டன் அரச குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூவின் அரசப் பட்டம் மன்னரால் பறிக்கப்பட்டது. இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டதும், தாமாகவே முன்வந்து Duke of York, Earl of Inverness, Baron Killyleagh ஆகிய தனது பிற அரச பட்டங்களையும் துறப்பதாக ஆண்ட்ரூ தெரிவித்திருந்தார்.

Order of the Garter and Knight Grand Cross of the Victorian Order என்ற பட்டங்களையும் இழந்துள்ளார். மேலும் இனி அவருக்கு His Royal Highness என்று உரிமை கிடைக்காது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் லண்டன் பெருநகர காவல் துறை, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தம்பியும் இளவரசர்களில் ஒருவருமாகிய ஆண்ட்ரூவை வின்ட்சர் எஸ்டேட்டில் 8,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அவரது வசிப்பிடமான ‘ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.

அரச குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் மன்னர் சார்லஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆண்ட்ரூவுக்கு எதிராக இந்த நடவடிக்கைக்கு இளவரசர் வில்லியம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று மட்டுமே அழைக்கப்படுவார் என்றும் ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறும் அவர் மாற்று தங்குமிடத்தைத் தனியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இளவரசி பீட்ரைஸ், தனது தந்தை ஆண்ட்ரூ வசிக்கும் ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறி உள்ளார். முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ( Norfolk) நோர்போக்கில் உள்ள (Sandringham Estate) சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டுக்குச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை ஒரு காலத்தில் மகாராணி எலிசபெத்துக்கு விருப்பான ஓய்வு இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்ட்ரூவின் தங்குமிடத்துக்குப் பிரிட்டிஷ் மன்னரால் தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பட்டங்கள் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறியபோதும் ஆண்ட்ரூ ஒரு அரச குடும்பத்தின் இரண்டு சலுகைகளை மட்டும் தக்க வைத்துக் கொள்வார்.

ஒன்று வாரிசு உரிமையாகும். வாரிசு உரிமையில் இருந்து நீக்கப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும். கூடவே சார்லஸ் மன்னராக இருக்கும் கனடா உட்பட மற்ற 14 நாடுகளின் ஒப்புதலும் பெற வேண்டும்.

இளவரசர் வில்லியம், இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோருக்குப் பிறகு எட்டாவது நபராக இடத்தில் வாரிசு உரிமையுடன் ஆண்ட்ரூ இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு சலுகை மாநில ஆலோசகராக இருப்பது ஆகும்.

ஆண்ட்ரூ அரச நிகழ்வுகள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப் படுவார். அரசு குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள், நினைவுச் சடங்குகள் போன்ற தனிப்பட்ட, குடும்ப நிகழ்வுகளுக்கு மட்டுமே அவருக்கு அழைப்பு கொடுக்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அப்போது பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் இளவரசர் ஆண்ட்ரூ மீது எடுக்கப்படவில்லை. கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் வழக்கை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ முடித்துக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டார்.

வர்ஜீனியாவின் சுய சரிதை Nobody’s Girl: A Memoir of Surviving Abuse and Fighting for Justice என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில், ஆண்ட்ரூ தன்னுடன் உறவு வைத்துக் கொள்வது தனது பிறப்புரிமை என்று நம்பியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுவே, தனது பட்டங்களையும் பதவிகளையும் இழந்து, முன்னாள் பிரிட்டன் இளவரசரை அரண்மனையை விட்டு வெளியேற வைத்துள்ளது.

Tags: மன்னர் சார்லஸ்King Charles's Action: Why was former Prince Andrew stripped of his titles?முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூஇளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Next Post

SC ST சட்டத்தில் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 3.5 ஆண்டு சிறை!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies