விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!
Mar 14, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் ஷென்சோ 21 விண்கலத்தின் மூலம் ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள், சர்வதேச சீன விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர். அவர்களுடன் 4 எலிகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்வெளி துறையில் சீனா புதிய சாதனை படைத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகச் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சீனாவை அமெரிக்கா வெளியேற்றியது. அதன் விளைவாக, விண்வெளியில் சீனா தனக்கென விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. முழுவதும் சீனாவால் கட்டப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை விடவும் சுமார் 20 சதவீதம் பெரியதாகும்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தால் இது கட்டுப்படுத்தப் படுகிறது. குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த விண்வெளி நிலையத்தை வசிக்கும் இடமாக வைத்திருக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

புதிய தொகுதிகளுடன் விண்வெளி நிலையத்தை விரிவுபடுத்தவும், வணிக நடவடிக்கைகளுக்குப் புறக்காவல் நிலையத்தைத் திறப்பதும், காய்கறி தோட்டங்களை அமைப்பதும் எனச் சீனா பணி செய்து வருகிறது.

தியான்காங் எனப் பெயரிடப்பட்ட சீனாவின் விண்வெளி நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2022 டிசம்பர் மாதத்தில் இந்த விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக, கடந்த பல ஆண்டுகளாகவே ‘ஷென்சோ-தொடர் விண்கலங்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.

ஷென்சோ விண்கலம் ரஷ்யாவின் Soyuz சோயுஸ் விண்கலத்தைவிட பெரியதான விண்கலமாகும். சீனாவின் (Mengzhou) மெங்சோ குழுவினரால் உருவாக்கப்பட்ட இது மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவும், சீனாவின் சொந்த விண்வெளி நிலையத்தில் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

ஷென்சோ-12 விண்கலத்தில் சீனாவின் விண்வெளி வீரர்கள் அடங்கிய முதல் குழு புதிய விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டனர். அந்த வரிசையில், ஷென்சோ 21 விண்கலம் சீனாவின் ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவபட்டுள்ளது. இது சீனாவின் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் 10வது விண்வெளி வீரர் விமானமாகும். சீனாவின் விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து, விண்வெளி வீரர்கள் செல்லும் ஆறாவது பயணம் இதுவாகும்.

2022ம் ஆண்டில் விண்வெளியில் மூன்று தொகுதிகள் கொண்ட சுற்றுப்பாதை புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்ட பின் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது ஏழாவது முறையாகும். இந்நிலையில், லாங் மார்ச்-2F கேரியர் ராக்கெட்டில் ஷென்சோ-12 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்று அடைந்துள்ளது.

மூத்த சீன விண்வெளி வீரரான 48 வயதான கமாண்டர் ஜாங் லு தலைமையில் வு ஃபீ மற்றும் ஜாங் ஹாங்ஷாங் ஆகிய விண்வெளி வீரர்கள் ஷென்சோ-21 விண்கலத்தில் சென்றுள்ளனர். இதில், ஷென்சோ-12 குழுவில் 32 வயதான வூ சீனா விண்வெளி தொழில்நுட்ப அகாடமியில் பொறியாளராக இருக்கிறார்.

முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றதன் மூலம், சீனாவின் இளைய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த ஜாங் லு மற்றும் அவரது குழுவினரை ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் பணியில் இருக்கும் ஷென்ஜோ 20 மிஷனின் கமாண்டர் சென் டோங் மற்றும் சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

ஷென்ஜோ 20 மிஷனின் கமாண்டர் சென் டோங், 400 நாட்கள் புவி சுற்றுப்பாதையில் இருந்த முதல் சீன விண்வெளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவரும் அவரது குழுவினரும் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஷென்சோ-21 விண்வெளிக் குழுவினருடன் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் எலிகள் என நான்கு எலிகளும் அதற்கான உணவுப் பொறிகளும் விண்வெளிக்கு அனுப்பப் பட்டுள்ளன. விண்வெளியில், உடலியல் மற்றும் நோயியல் செயல்முறைகளைப் படிப்பதற்கும், விண்வெளியில் வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் இருந்து எலிகள் மீண்டும் பகுப்பாய்வுக்காகப் பூமிக்குத் திரும்பும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விண்வெளி நிலையத்துக்கு வரிக் குதிரை மற்றும் மீன்களை அனுப்பி சீனா ஆய்வு செய்துள்ளது.

சிறிய பாலூட்டிகளை விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவது இதுவே முதல் முறை ஆகும். ஷென்சோ-21 குழு உறுப்பினர்கள் விண்வெளி வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், விண்வெளி மருத்துவம், விண்வெளி பொருள் அறிவியல், நுண் ஈர்ப்பு திரவ இயற்பியல் மற்றும் எரிப்பு மற்றும் புதிய விண்வெளி தொழில்நுட்பங்கள் உட்பட மொத்தம் 27 புதிய சோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி நிலையம் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் சந்திரனில் மனிதர்களைத் தரையிறங்குவதற்கான இலக்கை நோக்கிச் சீனா தீவிரமாக முன்னேறி வருகிறது.

Tags: விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்chinathe spaceHeavenly Palace in the Sky: 3 Chinese soldiers flew into space with 4 miceவிண்ணில் சொர்க்க அரண்மனை
ShareTweetSendShare
Previous Post

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

Next Post

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies