மாநிலங்களின் வளர்ச்சிமூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எந்தவொரு உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியா எப்போதும் தீர்வு காண முன் நிற்கிறது என்றும் உலகில் எங்கும் ஒரு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா உதவிகள் வழங்குவதில் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது என்றும் கூறினார்.
மாநிலங்களின் வளர்ச்சிமூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















