மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2026-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் பம்பா, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் செயல்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















