அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற ஹரியானா மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கவுத்தமாலாவில் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹோஷியார்பூரைச் சேர்ந்த 21 வயதான சாஹிப் சிங் மற்றும் கைதால் பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவராஜ் சிங் ஆகியோர் ஏஜென்ட்டுகள் மூலம் டன்கி பாதை எனப்படும் சட்டவிரோதமாகப் பாதை வழியாக அமெரிக்காவுக்கு வேலைதேடி சென்றனர்.
இந்நிலையில் கவுதமாலாவில் மனிதக் கடத்தல்காரர்களால் இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, குடும்பத்தினரிடம் பணம் கேட்ட நிலையில், தாமதமானதால் இருவரையும் சுட்டுக்கொன்றனர்.
















