கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் கல்லூரி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை வெள்ளகிணறு பகுதியில் தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
















