அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹவாய் மாகாணத்திற்கு சரக்கு விமானம் புறப்பட்டது.
ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனால் தீயில் கருகி 7 பேர் உயிரிழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் சுமார் 38 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிச்செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















