பசுபிக் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வந்த படகின் மீது அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
மேலும், கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாகப் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பசுபிக் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்க படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அழிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
















