கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பாவையர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 376 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
மேலும், முனைவர் பட்டம் பெற்ற 50 மாணவிகளுக்கும், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற 19 மாணவிகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒடிசா மாநில பெருகாம்பூர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாஞ்சலி தாஸ் கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக துணைவேந்தர் கலா, பதிவாளர் ஜெயப்பிரியா, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















