சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!
Nov 8, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகரில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த மாமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலைகள், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவுநீர் என அவலநிலையில் காணப்படும் இப்பகுதி தான் சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகர். திமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் சிற்றரசு தான் புஷ்பா நகரை உள்ளடக்கிய 110வது வார்டுக்கு உட்பட்ட 110வது வார்டின் மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகள் என வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ஏதாவது ஒரு வேலை நடந்து கொண்டே இருப்பதால் புஷ்பா நகர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் குழாய்கள் அமைக்கத் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதும், மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதும் என உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் காணப்படும் சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் சாலைகளின் இருபுறங்களிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரின் மூலமாகவும் அதிலிருந்து உருவாகும் கொசுக்களின் மூலமாகவும் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னையில் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக இந்தப் புஷ்பா நகர் பகுதியும் திகழ்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகள் குறித்து வார்டு உறுப்பினர் சிற்றரசு தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் வரை பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தங்களின் வாழ்வாதரம் மேம்படும் என நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புஷ்பாநகர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags: புஷ்பா நகர்அவலம்Trouble in central Chennai: People cryingsaying they are living a hellish lifeகண்ணீர் வடிக்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவில் கடைக்கு சென்ற இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

Next Post

பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

Related News

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

நகராட்சி துறையில் முறைகேடு – தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம் : அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்து – 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies