சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகரில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த மாமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலைகள், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவுநீர் என அவலநிலையில் காணப்படும் இப்பகுதி தான் சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகர். திமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் சிற்றரசு தான் புஷ்பா நகரை உள்ளடக்கிய 110வது வார்டுக்கு உட்பட்ட 110வது வார்டின் மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகள் என வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ஏதாவது ஒரு வேலை நடந்து கொண்டே இருப்பதால் புஷ்பா நகர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் குழாய்கள் அமைக்கத் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதும், மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதும் என உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் காணப்படும் சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் சாலைகளின் இருபுறங்களிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரின் மூலமாகவும் அதிலிருந்து உருவாகும் கொசுக்களின் மூலமாகவும் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னையில் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக இந்தப் புஷ்பா நகர் பகுதியும் திகழ்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகள் குறித்து வார்டு உறுப்பினர் சிற்றரசு தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் வரை பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தங்களின் வாழ்வாதரம் மேம்படும் என நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புஷ்பாநகர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags: புஷ்பா நகர்அவலம்Trouble in central Chennai: People cryingsaying they are living a hellish lifeகண்ணீர் வடிக்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவில் கடைக்கு சென்ற இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

Next Post

பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies