டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு - விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!
Jan 14, 2026, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 11, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் தொர்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு அமித்ஷா நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விபத்து தொடர்பாகவும், அதன் விசாரணை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, கார் வெடிப்பு சம்பவத்தில் 3 முதல் 4 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புக் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தி கிடைத்தவுடன் உடனடியாக பிரதமரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு பிரதமருக்கு விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

இதேபோல் கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சம்பவம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: car blast in delhiamith shah on car blastdelhi car blast updateminister amith shah pressmeetdelhi car blast red fortdelhi red fort car blastdelhi car blast latest updatesdelhi car blast latest news liveCar Blastdelhi red fort car blast livedelhi blastlal qila delhi car blast live updatedelhi car blastdelhi blast explosion in carcar blast delhidelhi cardelhi car blast newsdelhi city blast
ShareTweetSendShare
Previous Post

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

Next Post

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies