சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி - சிக்கிய ஜென்டில் மேன்!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு வீடுகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி 10க்கும் அதிகமான குடும்பங்களை ஏமாற்றி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மார்க் ஜெண்டில்மேன் கெட்டப்பில் சதுரங்க வேட்டை திரைப்படத்தையும் மிஞ்சும் அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் அருகே உள்ள கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் தனக்கு சொந்தமான இரண்டு வீடுகள் கொண்ட குடியிருப்பை வாடகைக்கு விடுவதாகக் கூறி நோ புரோக்கர் செயலியில் பதிவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடும் பலர் ஸ்ரீவத்ஸை தொடர்பு கொண்டு குத்தகைக்கு வருவதாக கூறி 5 முதல் 10 லட்சம் வரையிலான பணத்தை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கும்போது, ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யக் கால அவகாசம் வேண்டுமெனவும், அவர்கள் காலி செய்தபின்பு குடியேற அழைப்பும் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக மட்டுமல்லாமல் நேரில் வந்து வீட்டைப் பார்த்தவர்களும் ஸ்ரீவத்ஸ்விடம் பல லட்ச ரூபாயை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். பணத்தை ரொக்கமாகக் கொடுப்பவர்களிடம் அதனை எண்ணி கூடப் பார்க்காமல் உங்களின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீவத்ஸ் கூறியுள்ளார். அதிலும் கவர் சுற்றிய பணத்தை வாங்கும்போது எடையை வைத்தே பணத்தின் அளவை முடிவு செய்துவிடுவேன் எனப் பேசிய வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளன. இருவீடுகளை மட்டுமே வைத்திருந்த ஸ்ரீவத்ஸ் 15-க்கும் மேற்பட்டோரிடம் இதே போன்று கூறி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.

பணத்தை கொடுத்தவர்கள் குடியிருக்க வருவதற்கான தேதி நெருங்கிய நிலையில் ஸ்ரீவத்ஸ் தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். பணத்தை பறிகொடுத்தவர்கள் விட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

வீட்டின் முன்புறமாக இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பாதிக்கப்பட்ட மக்கள், ஸ்ரீவத்ஸ் வீட்டை காலி செய்யும் போது பயன்படுத்திய வாகனத்தை விசாரணை செய்து அதன் மூலம் மாங்காட்டில் தங்கியிருந்த ஸ்ரீவத்ஸை கண்டுபிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பணத்தை ஏமாற்றியது குறித்து கேள்வி எழுப்பும் போது எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வந்தாலும் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என ஸ்ரீவத்ஸ் பேசியிருக்கிறார்.

மவுலிவாக்கத்தைப் போலவே வேறு ஏதேனும் பகுதியில் இதே போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக வீடுகளை வாடகை மற்றும் குத்தகைக்கு பார்ப்போர் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chess hunting style: Fraud by showing houses - Gentleman caughtசிக்கிய ஜென்டில் மேன்
ShareTweetSendShare
Previous Post

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies