சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி - சிக்கிய ஜென்டில் மேன்!
Nov 11, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Web Desk by Web Desk
Nov 11, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு வீடுகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி 10க்கும் அதிகமான குடும்பங்களை ஏமாற்றி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மார்க் ஜெண்டில்மேன் கெட்டப்பில் சதுரங்க வேட்டை திரைப்படத்தையும் மிஞ்சும் அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் அருகே உள்ள கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் தனக்கு சொந்தமான இரண்டு வீடுகள் கொண்ட குடியிருப்பை வாடகைக்கு விடுவதாகக் கூறி நோ புரோக்கர் செயலியில் பதிவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடும் பலர் ஸ்ரீவத்ஸை தொடர்பு கொண்டு குத்தகைக்கு வருவதாக கூறி 5 முதல் 10 லட்சம் வரையிலான பணத்தை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கும்போது, ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யக் கால அவகாசம் வேண்டுமெனவும், அவர்கள் காலி செய்தபின்பு குடியேற அழைப்பும் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக மட்டுமல்லாமல் நேரில் வந்து வீட்டைப் பார்த்தவர்களும் ஸ்ரீவத்ஸ்விடம் பல லட்ச ரூபாயை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். பணத்தை ரொக்கமாகக் கொடுப்பவர்களிடம் அதனை எண்ணி கூடப் பார்க்காமல் உங்களின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீவத்ஸ் கூறியுள்ளார். அதிலும் கவர் சுற்றிய பணத்தை வாங்கும்போது எடையை வைத்தே பணத்தின் அளவை முடிவு செய்துவிடுவேன் எனப் பேசிய வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளன. இருவீடுகளை மட்டுமே வைத்திருந்த ஸ்ரீவத்ஸ் 15-க்கும் மேற்பட்டோரிடம் இதே போன்று கூறி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.

பணத்தை கொடுத்தவர்கள் குடியிருக்க வருவதற்கான தேதி நெருங்கிய நிலையில் ஸ்ரீவத்ஸ் தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். பணத்தை பறிகொடுத்தவர்கள் விட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

வீட்டின் முன்புறமாக இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பாதிக்கப்பட்ட மக்கள், ஸ்ரீவத்ஸ் வீட்டை காலி செய்யும் போது பயன்படுத்திய வாகனத்தை விசாரணை செய்து அதன் மூலம் மாங்காட்டில் தங்கியிருந்த ஸ்ரீவத்ஸை கண்டுபிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பணத்தை ஏமாற்றியது குறித்து கேள்வி எழுப்பும் போது எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வந்தாலும் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என ஸ்ரீவத்ஸ் பேசியிருக்கிறார்.

மவுலிவாக்கத்தைப் போலவே வேறு ஏதேனும் பகுதியில் இதே போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக வீடுகளை வாடகை மற்றும் குத்தகைக்கு பார்ப்போர் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chess hunting style: Fraud by showing houses - Gentleman caughtசிக்கிய ஜென்டில் மேன்
ShareTweetSendShare
Previous Post

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

Next Post

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

Related News

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies