இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!
Jan 14, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூளையில்லாமல் பிறந்த பெண் குழந்தை, மருத்துவர்களின் கணிப்பையெல்லாம் முறியடித்து, 20ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. வியத்தகு சம்பவம்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்…

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் தான், நம் அனைவரின் புருவம் உயரக் காரணமான நபர்… 20 ஆண்டுகளுக்கு முன்பு ஷான் சிம்ப்ஸ்ன்- லொரெனா சிம்ப்ஸன், தங்களது குழந்தையின் வருகையை மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கியிருந்த தருணம் அது. ஆனால், அழகான அந்தப் பெண் குழந்தையைக் கொஞ்சி மகிழ முடியாமல் பெற்றோர் துடித்துப் போக நேரிட்டது.

காரணம் குழந்தை அலெக்ஸ் சிம்ப்ஸன், ஹைட்ரனென்செபாலி (Hydranencephaly) என்ற அரிய வகை நரம்பியல் கோளாறுடன் பிறந்திருந்தார். இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையின் பெரும்பகுதி இல்லாமல் இருக்கும் என்பதால், அலெக்ஸ சிம்ப்ஸன், 4 வயது வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று அவரது பிறந்தநாளிலேயே இறப்பு தேதியையும் சேர்த்தே குறித்துவிட்டது மருத்துவ உலகம். மருத்துவர்கள் அவளுடைய நிலைமையைப் பற்றிக் கூறிய பிறகு, பெற்றோர் பயந்தார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து காப்பாற்றியது.

விதி வலியது என்பது போல், நான்கு வயதை கடந்தும் அலெக்ஸ் உயிர்ப்புடன் இருந்தார். தற்போது தனது 20வது பிறந்தநாளையும் கொண்டாடியிருப்பதோடு, மருத்துவர்களின் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, மருத்துவ அதிசயமாகத் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். அலெக்ஸுக்கு, என் சுண்டுவிரலில் பாதி அளவே மூளையின் பின்புறம் உள்ள செரிபல்லம் இருந்ததாகக் கூறும் அவரது தந்தை, அலெக்ஸால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது என்றும் கூறுகிறார்.

எனினும் சுற்றி உள்ளவர்களின் உணர்வுகளையும், அவர்களது இருப்பையும் அலெக்ஸால் உணர முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார். அவரது கண் அசைவுகள் அவள் எதிர்பார்ப்பதை உணர்த்தும் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, 5,000-ல் ஒரு கர்ப்பத்தில் அல்லது 10,000-ல் ஒரு கர்ப்பத்தில் ஹைட்ரானென்ஸ்பாலி ஏற்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் ஓராண்டுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை . ஆனால் அலெக்ஸின் 20 ஆண்டுகால வாழ்க்கை மருத்துவ உலகையே வியக்க வைத்துள்ளது.

Tags: A medical miracle that defeated nature: A woman born without a brain celebrates her 20th birthdayமருத்துவ அதிசயம்
ShareTweetSendShare
Previous Post

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

Next Post

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies