இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை எனத் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தின் வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதற்கு ஆப்கானிஸ்தான் தான் காரணமெனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஆனால் தலிபான்கள் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
















