புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் மனைவி சில வாரங்களுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா நகரில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி அபிரா பிபி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத்-உல்-மொமினட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளதாகவும், அவருக்கு அந்த அமைப்பின் ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா.சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசாரின் இளைய சகோதரி சாதியாவுடன் இணைந்த சில வாரங்களில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
















