தெப்பக்குளத்தை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்ட முயற்சி? - கொந்தளிக்கும் பக்தர்கள்!
Jan 14, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெப்பக்குளத்தை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்ட முயற்சி? – கொந்தளிக்கும் பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான செல்லூர் திருவேப்புடையார் கோயிலின் தெப்பக்குளத்தை மூடிவிட்டு வணிக நிறுவனங்கள் கட்ட முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது. தெப்பக்குளம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியிருக்கும் பதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான மதுரை செல்லூர் திருவேப்புடையார் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் 30 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்திருக்கிறது.

அதோடு அந்தத் தெப்பக்குளம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீளம், அகலத்தில் தொடங்கி, அதனை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எனப் பத்துக்கும் அதிகமான கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நீளம், அகலத்தை மட்டும் பதிலாகத் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை, மீதமிருக்கும் கேள்விகள் தொடர்பாகத் தங்களிடம் ஆதாரம் இல்லை எனத் தெரிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெப்பக்குளம் தொடர்பான விவரங்கள் இல்லை எனக் கைவிரிக்கும் இந்து சமய அறநிலையத்துறை, வருங்காலத்தில் அந்தத் தெப்பக்குளமே இல்லை எனும் சூழலை உருவாக்கிக் கொண்டிருப்பதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெப்பக்குளத்தை பராமரிக்காமல் இழுத்து மூடிவிட்டு அங்கு வணிக ரீதியிலான கட்டடங்களை கட்டி வருவாய் ஈட்ட முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பக்தர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் எனப் பக்தர்கள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட இணை ஆணையர் கோயில் பிரகாரத்திற்குள் தெப்பக்குளம் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

பழமையும் தொன்மையும் வாய்ந்த நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய, மதுரை திருவேப்புடையார் கோயில் தெப்பக்குளத்தை புதுப்பித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Attempt to remove the hot spring and build a commercial complex? - Devotees are upsetமதுரை மீனாட்சி அம்மன்
ShareTweetSendShare
Previous Post

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Next Post

துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies