துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடமின்றி படும் சிரமங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 20க்கும் அதிகமான நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 20க்கும் அதிகமான தினக்கூலி தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். வீடு, வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பது, அதனைத் தரம்பிரிப்பது, பொது நிகழ்ச்சிகளுக்கான தூய்மைப் பணிகளையும் இந்தத் தூய்மைப் பணியாளர்களே செய்து வருகின்றனர்.

வசிப்பதற்கு தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் இல்லாத இந்தத் தூய்மைப் பணியாளர்கள் கண்மாய் ஓரங்களிலும், புறம்போக்கு பகுதிகளிலும் சிறு வீடுகளை அமைத்துத் தங்கி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களில் சிலருக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படாத காரணத்தினால் அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையிலேயே நீண்ட ஆண்டுகள் இருப்பதாகக் கூறுகின்றனர் துாய்மை பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஆவணங்கள் ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பபட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மீண்டும் மீண்டும் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை எனத் தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரைத் தூய்மைப்படுத்தி மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கான பட்டாவுடன் கூடிய குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமையாகும்.

Tags: NEWS TODAYTn newsSanitation workers in distress: Struggling without a home to live in for 27 years
ShareTweetSendShare
Previous Post

தெப்பக்குளத்தை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்ட முயற்சி? – கொந்தளிக்கும் பக்தர்கள்!

Next Post

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies