துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!
Nov 14, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடமின்றி படும் சிரமங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 20க்கும் அதிகமான நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 20க்கும் அதிகமான தினக்கூலி தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். வீடு, வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பது, அதனைத் தரம்பிரிப்பது, பொது நிகழ்ச்சிகளுக்கான தூய்மைப் பணிகளையும் இந்தத் தூய்மைப் பணியாளர்களே செய்து வருகின்றனர்.

வசிப்பதற்கு தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் இல்லாத இந்தத் தூய்மைப் பணியாளர்கள் கண்மாய் ஓரங்களிலும், புறம்போக்கு பகுதிகளிலும் சிறு வீடுகளை அமைத்துத் தங்கி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களில் சிலருக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படாத காரணத்தினால் அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையிலேயே நீண்ட ஆண்டுகள் இருப்பதாகக் கூறுகின்றனர் துாய்மை பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஆவணங்கள் ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பபட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மீண்டும் மீண்டும் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை எனத் தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரைத் தூய்மைப்படுத்தி மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கான பட்டாவுடன் கூடிய குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமையாகும்.

Tags: NEWS TODAYTn newsSanitation workers in distress: Struggling without a home to live in for 27 years
ShareTweetSendShare
Previous Post

தெப்பக்குளத்தை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்ட முயற்சி? – கொந்தளிக்கும் பக்தர்கள்!

Next Post

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies