அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!
Nov 14, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

Web Desk by Web Desk
Nov 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ஒத்தக்கடையில் முறையாகத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியில் முறையாகக் குப்பைகள் அகற்றப்படாமல் சாலைகளில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. குப்பைகளும், இறைச்சிக் கழிவுகளும் நீர்நிலைகளிலும், பாசன கால்வாயிலும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஒத்தக்கடை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொதுமயானத்தில் கொட்டி வைக்கப்படுகின்றன.

இதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பல மாதங்களாக மயான பகுதியில் குப்பைகள் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பெருகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுவட்டார மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அருகே ஒத்தக்கடை உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவதாகவும், கால்நடைகள் நெகிழி பைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒத்தக்கடையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட நிலையில், அதனைத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மதுரை மாநகரத்தின் துவக்கமாக அமைந்துள்ள ஒத்தக்கடை ஊராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, தங்கள் சிரமங்களை அரசு போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Tags: Where are the basic facilities?: Othakadai Panchayat looks like a pile of garbageஒத்தக்கடை ஊராட்சி
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Next Post

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Related News

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies