ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.
தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே கடந்த வாரம் டோக்கியோ நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறினார்.
ஜப்பான் பிரதமர் தசைச்சியின் பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது. மேலும், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்குச் சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே ஜப்பான் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தகைச்சியின் பேச்சு சீனா – ஜப்பான் பரிமாற்றங்களுக்கான சூழலைக் கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறியுள்ளது.
மேலும் அவரது பேச்சு ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்நாட்டுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.
















