ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!
Mar 15, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியானா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, அம்மாநிலத்தில் பணியாற்றி வந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் அகமதை போலீசார் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக 360 கிலோ வெடிபொருளை ஜம்மு-காஷ்மீருக்கு காவல் துறையினர் கொண்டு சென்று, அங்குள்ள நெளகாம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், வெடிபொருள்களின்மாதிரிகளைக் காவல் துறையினரும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வுபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத்செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை எடுக்கும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது தற்செயலான விபத்து என்றும் தெரிவித்தார்.

வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், நௌகாம் காவல் நிலையக் கட்டடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளர் பிரசாந்த் லோகண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நௌகாம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடி விபத்து தற்செயலானது எனவும், விபத்திற்கான காரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Tags: Jammu and Kashmir: 9 killed in explosives explosion at police stationஜம்மு-காஷ்மீா்
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

Next Post

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies