தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தடை செய்யப்பட்ட THREEMA செயலியை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது என்ன THREEMA செயலி… விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

THREEMA செயலி… டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக மருத்துவர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட APP. ஸ்விட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட THREEMA செயலிக்கு இந்தியாவில் 2023-ம் ஆண்டிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் சதிவேலைக்காரர்களுக்கான அத்தனை அம்சங்களும் அதில் இடம்பெற்றிருப்பதே. மற்ற செயலிகளை போல், THREEMA செயலியில் தனிப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டியதில்லை.

வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளில், ரெஜிஸ்ட்ரேசன் செய்ய வேண்டும் என்றால், மின்னஞ்சலோ, தொலைபேசி எண்ணோ அவசியம். ஆனால், THREEMA செயலியில் அதற்கான தேவையில்லை என்பதால், யார் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தை கண்டறிவது கடினம்.

THREEMA செயலியைப் பயன்படுத்துப்பவர்களுக்கு தனி ஐடி கொடுக்கப்படுவதால், அதை வைத்து தகவலை பரிமாறிக்கொள்ள முடியும் என தெரிகிறது. THREEMA செயலிலை பிளே ஸ்டோரில் இருந்தெல்லாம் பதிவிறக்கம் செய்து விட முடியாது. சுவிட்சர்லாந்தில் உள்ள THREEMA செயலியின் தலைமையத்திற்கு பிட்காயின் செலுத்தி, அதன் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

இதுவும் யார் யாரெல்லாம் பயன்பாட்டாளர்கள் என்பதை கண்டறிவதில் சிக்கிலை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாகவே மருத்துவர்கள் உமர் நபி, முஸம்மில் ஷகில், ஷானீன் சயீத் உள்ளிட்டோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்தியாவில் சதி வேலை நிகழ்த்த THREEMA செயலிக்கெனத் தனி சர்வர் அமைத்ததும் என்ஐஏ விசாரணையில் புலப்பட்டுள்ளது. பயங்கரவாத கும்பலை தவிர வேறு யாருக்கும், தகவல்கள் கசிந்து விடக் கூடாது என்பதற்காகப் பிரேத்யேக சர்வர் அமைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது, யார் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பயங்கரவாதிகள் இவ்வாறே பகிர்ந்துள்ளனர்.

இதனிடையே, THREEMA செயலியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுப்பது கடினம் என்பதால் என்ஐஏ அதிகாரிகளுக்குக் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் அயல்நாடுகளில் இருந்து யாரெல்லாம் தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் THREEMA செயலியை தான் பயன்படுத்தினார்கள் என்பது அவர்களது டெலிகிராம் சாட் மூலம் தெரியவந்துள்ளது.

THREEMA செயலி கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள், இதனைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பான தகவல் தொடர்புக்கு உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, இப்போது பயங்கரவாதிகளின் சாதனமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: delhi car blastAmbalam used a banned app: Terrorists planned on THREEMA APPTHREEMA APP
ShareTweetSendShare
Previous Post

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Next Post

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies