ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன.
இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம், ஏற்பட்டது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்ற நிலையில் மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
















