விழுப்புரம் அருகே தன்னுடைய கையொப்பம் இல்லாமல் பணி நியமன ஆணைகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வல்லம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகத் திமுகவைச் சேர்ந்த மலர்விழி அண்ணாதுரை என்பவர் பதவி வகித்து வந்தார்.
இவர் பணியாற்றும் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கான நியமன ஆணைகள் இருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவரிடம் எந்த ஒப்புதலும் பெறாமலும், கையொப்பம் இல்லாமலும், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய மலர்விழி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
















