அர்ஜென்டினாவில் சாலையில் நின்று கொண்டிருந்த ரஷ்ய பெண்ணிடம் மர்ம நபர்கள் செல்போனை திருட முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் சைக்கிளில் இருந்தவாறே சாலையில் வைத்துச் செல்போனை உபயோகித்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்தனர். ஆனால், தைரியமாகச் செயல்பட்ட பெண், ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை பிடித்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருடரைப் பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
















