ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையறிந்து அங்குச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலடி தாக்குதல் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
















