சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரியின் ஓட்டுநரைப் போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவை சேர்ந்த மருத்துவ மாணவி சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளார்.
அப்போது, பின்னால் நின்றிருந்த நபர் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அதிகாரி ஒருவருக்கு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
















