கோயில்களுக்குச் செயல் அலுவலர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 45 ஆயிரத்து 809 கோயில்கள் இருப்பதாகவும், அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் நியமன உத்தரவுகளை இணையதளங்களின் பதிவேற்றம் செய்யகோரி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
















