துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதி நவீன கட்டமைப்புகளைக் கொண்ட சொகுசு விமானங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 500 விமானம் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
150 நாடுகளில் இருந்து விமான தொழில் துறையை சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களான பம்பார்டியர், டசால்ட், எம்பிரேர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின், காலிடஸ் நிறுவனங்களும் கண்காட்சியில் தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்தியா சார்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், டி.ஆர்.டி.ஓ., கோரல் டெக்னாலஜீஸ், டேண்டல் ஹைட்ராலிக்ஸ், இமேஜ் சினர்ஜி எக்ஸ்புளோரர், எஸ்.எப்.ஓ., டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. பல்வேறு சொகுசு வசதிகளுடன் காட்சிப்படுத்தப்பட்ட விமானங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
















