புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் இரண்டு தலைமுறையாக வசித்து வரும் நிலையில், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் குற்றம்சாட்டி வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெங்கம்மாள் சத்திரம் யுரோ கற்றல் மையம் கட்டடத்தைத் திறந்து வைக்க வந்த மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
















