மதுரை மேயர் தேர்வு எப்போது? : சுகாதார சீர்கேட்டால் அவதி - குமுறும் மக்கள்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மேயர் தேர்வு எப்போது? : சுகாதார சீர்கேட்டால் அவதி – குமுறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வது தள்ளிப் போவதால், திட்டப் பணிகள் முடங்கிப் போய், மாநகரத்தில் எந்தப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையின் முக்கியப் பிரச்சனையாகச் சுகாதாரக் கேடு உருவெடுத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

அண்மையில் சொத்து வரி வசூலில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது வெட்ட வெளிச்சமானதால், மத்திய குற்றப்பிரிவு தனது பிடியை இறுக்கியது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த். மண்டல தலைவர் கணவர் கண்ணன், உதவி ஆணையர் உள்ளிட்ட 23 பேரை கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிரந்தர அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் எனக் கைதானவர்களில் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம் காரணமாக ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு குழுத் தலைவர்கள் ராஜினாமா.

மாநகராட்சி மேயர் இந்திராணி பதவி விலகினார். நிலைமை இப்படியிருக்க ஒரு மாதத்தைக் கடந்தும் புதிய மேயரை தேர்வு செய்யாதது மதுரை மாநகராட்சி பணிகளை முடக்கியுள்ளது. புதிய மேயர் தேர்வு தள்ளிப் போவதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பணிகள், குடிநீர், கழிவுநீர், குப்பைகள் அகற்றும் பணிகள், புதிய திட்டங்கள் செயல்படுத்துதல் என எதுவும் நடைபெறவில்லை.

குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகக் குமுறுகிறார்கள் உள்ளூர்வாசிகள்… தூங்கா நகரம், கோவில் மாநகரம், திருவிழா நகரம் கலாசார நகரம் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை மாநகரம் தற்போது குப்பை மாநகரம் மாறி விட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மதுரைவாசிகள்.

அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர் தங்களுக்கு ஆதரவான ஒரு நபரை மேயராகத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தி வரும் நிலையில், திமுகவுக்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி வருகிறது.

எனவே புதிய மேயரை உடனடியாகத் தேர்வு செய்து, சுகாதார சீர்கேட்டைக் களைய தமிழக அரசும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: மதுரை மேயர் தேர்வு எப்போது?Tn newsWhen is the Madurai mayoral election?: People are worried about health problems
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

Next Post

பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம் : கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies