காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்கும் குழுவில் தங்களையும் இணைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர், பயிர் நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க அதிகாரிகள் குறைவாகவே இருப்பதால் விவசாயிகளையும் குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
















