தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளத்தில் மயானத்திற்கு செல்லச் சாலை வசதி இல்லாததால், உறவினர்கள் கால்வாயில் கழுத்து அளவில் உள்ள தண்ணீரில் இறங்கி, சடலத்தைச் சுமந்து சென்றனர்.
முன்னதாக, மயானத்திற்கு செல்லச் சாலை வசதி அமைத்துத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
















