கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சென்னை அரும்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இலக்கியத்தின் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய ஈரோடு தமிழன்பன், ஈரோடு மாவட்டதில் உள்ள சென்னிமலையில் 1933ஆம் ஆண்டு பிறந்தார்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதைகள், புதினங்கள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். “வணக்கம் வள்ளுவ” நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள தமிழன்பன் வயது மூப்பு காரணமாக 92வது வயதில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் சென்னை அரும்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
















