அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே, கோயில் நிதியை பயன்படுத்த வேண்டும் எனக் கோயில் இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிதியில், வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கோயில் இணை ஆணையர்கள், செயலர்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே கோயில் நிதியை பயன்படுத்த வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















